கொரோனா காரணமாக பாடசாலைகளை மூட முடியாது – ஹரித அலுத்கே

கொரோனா தொற்று ஆபத்து காரணமாகப் பாடசாலைகளைத் தொடர்ந்தும் மூட முடியாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளைத் தொடர்ந்தும் நடத்த அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க பெற்றோர் , சுகாதாரப் பிரிவு மற்றும் கல்வி அதிகாரிகள் ஆகிய மூன்று தரப்பினரும் தங்களது பொறுப்புகளைச் சரியான முறையில் நிறைவேற்ற வேண்டும் என்று அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று ஆபத்து காரணமாகப் பாடசாலைகளைத் தொடர்ந்தும் மூட முடியாது என்று அரசவைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹரித அலுத்கே ‍கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.