மஹர சிறைக்கலவர விசாரணை குழுவில் இருந்து அஜித் விலகல்!

xdownload 5.jpg.pagespeed.ic

மஹர சிறைக்கலவரம் தொடர்பில் விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவில் இருந்துக பேச்சாளர், பிரதி காவற்துறை அதிபர் அஜித் ரோஹண விலகுவதாக அறிவித்துள்ளார்.

நீதி அமைச்சர் அலி சப்ரிக்கு இதனை கடிதம் மூலம் அவர் அறிவித்துள்ளார்.

தான் உத்தியோகபூர்வ காவற்துறை பேச்சாளராக இருப்பதால் இந்த விசாரணை குழுவில் பணியாற்றுவது ஆர்வ முரணானது என அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

மஹர சிறைக்கலவரம் தொடர்பில் விசாரிக்க முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி சரோஜினி வீரரத்ன தலைமையில் நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட குழுவில் அஜித்தும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.