மேலும் 297 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

தொழில்வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்ற மேலும் 297 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

அதன்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸின், துபாயிலிருந்து 162 பேரும், மாலைதீவின் ஆனிலிருந்து 44 பேரும், கட்டாரிலிருந்து 21 பேரும், இந்தியாவின் மும்பையிலிருந்து 70 பேரும் இன்று அதிகாலை காட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைத்து பயணிகளும் விமான நிலையத்தில் பல்வேறு தனியார் வைத்தியசாலையின் ஊழியர்களினால் பி.சி.ஆர்.சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை தொழில்வாய்ப்புக்காக நாட்டிலிருந்து 425 இலங்கையர்கள் பல்வேறு நாடுகளை நோக்கி இன்றைய தினம் புறப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.