மஹர சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக எதிக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்ஹரின்பெர்ணான்டோ தலைமையிலான 10 பேர் அடங்கிய குழுவினர் மஹர சிறைச்சாலைக்கு சென்றுள்ளதாக சிறைச்சாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான நளின் பண்டார, திலிப்வெத ஆராச்சி, ரோகிணி கவிரத்ன, ஹர்ஷன ராஜகருணா, ஜே.சி.அலவத்துவல, முஜிபுர் ரஹ்மான், ஹெக்டர் அப்புஹாமி, ரோஹன பண்டார ஆகியோர் மஹர சிறைச்சாலைக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்தமாததின் இறுதி வாரத்தில் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் காரணமாக 9 கைதிகள் உயிரிழந்ததுடன் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது