புரெவி சூறாவளியானது இலங்கையின் வடகிழக்கு கரையில் குச்சவெளிக்கும் திரியாயிக்கும் இடைப்பட்ட பகுதியில் நேற்றிரவு ஊடறுத்து சென்று உள்ளே மையம் கொண்டுள்ளது.
இதன்காரணமாக வடக்கு கிழக்கு பகுதிகளில் பலத்த காற்று வீசுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் காற்றின் வேகமும் அதிகரித்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, அசாதாரண காலநிலை தொடர்பான அவசர தகவல்களுக்கு 117 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்த முடியும் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீக் கொடிப்பிலி தெரிவித்தார்