யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட கடும் காற்று காரனமாக சுமார் 55 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடைந்தங்கள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு சுமார் 50 வீடுகள் சேதமாகியுள்ள அதே வேளை 55 குடும்பங்களை சேர்ந்த 186 நபர்கள், வல்வை முத்துமாரியம்மன் கலியாண மண்டபத்தில் தற்போது தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
சரியாக நேற்று இரவு 7.35 மணியளவில் பலந்த காற்று ஏற்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு மீன்பிடி உபகரணங்கள் பல சேதமாகியுள்ளதாக குறித்த பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.