யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 45318 நபர்கள் பாதிப்பு!

பணிப்பாளர் என்.சூரியராஜ்
பணிப்பாளர் என்.சூரியராஜ்

யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று இரவு 10.30 மணி வரை 13707 குடும்பங்களை சேர்ந்த 45318 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அத்தோடு யாழ். மாவட்டத்தில் தற்போது 34 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 1167 குடும்பங்களை சேர்ந்த 3927 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், 42 வீடுகள் முழுமையாகவும், 1963 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.