மேலும் 476 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 476 இலங்கையர்கள் இன்று காலை(04) நாடு திரும்பினர்.

அதன்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து 130 பேரும், கட்டாரின் தோஹாவிலிருந்து 45 பேரும், ஜப்பானின் நரிட்டோவிலிருந்து ஏழு பேரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவ்வாறு நாடு திரும்பிய அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர். சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.