புரேவி புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட நெடுந்தீவு பகுதிக்கு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட குழுவினர் விஜயம்!

IMG 20201204 WA0053 1
IMG 20201204 WA0053 1

யாழ்.மாவட்டத்தில் புரேவி புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நெடுந்தீவு பகுதியை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரச அதிபர் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டுள்ளனர்.

இன்றைய தினம் நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிற்கு மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் ம. பிரதீபன் நெடுந்தீவு பிரதேச செயலாளர் சத்தியசோதி மற்றும் நெடுந்தீவு பிரதேச உத்தியோகத்தர்கள் களவிஜயம் செய்து புரேவி புயலால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பாக நெடுந்தீவு பிரதேச மக்கள் மற்றும் நெடுந்தீவு பிரதேச பொது அமைப்புகளுடன் கலந்துரையாடினார்.

இந்த களவிஜயத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களது பிரச்சனைகள், நெடுந்தீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் மக்களது போக்குவரத்து பிரச்சனைகள், துறைமுகத்தை அண்டிய பிரதேசங்களில் காணப்படும் கடலரிப்பு தொடர்பான பிரச்சனைகள் ஆகியவை தொடர்பாக கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG 20201204 WA0047
IMG 20201204 WA0050 1
IMG 20201204 WA0053 1
IMG 20201204 WA0041
IMG 20201204 WA0043
IMG 20201204 WA0045