இலங்கை அரசாங்கம் எடுத்த முடிவால் சிரமங்களை எதிர்கொள்ளும் ஜப்பானிய வாகன ஏற்றுமதியாளர்கள்!

625.500.560.350.160.300.053.800.900.160.90 60
625.500.560.350.160.300.053.800.900.160.90 60

கொரோனா பரவல் காரணமாக வாகனங்களை இறக்குமதி செய்வதை இடை நிறுத்த இலங்கை அரசாங்கம் எடுத்த முடிவால் ஜப்பானிய வாகன ஏற்றுமதியாளர்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக ஜப்பான் வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் நிஷாந்த மீகல்ல கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு இறக்குமதி செய்ய தயாரிக்கப்பட்ட வாகனங்கள் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக தாங்கள் பல சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மார்ச் மாதத்திற்கு முன்பு இறக்குமதி செய்ய முன்பதிவு செய்யப்பட்ட வாகனங்களை மட்டும் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜப்பான் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத் தலைவர் நிஷாந்த மீகல்ல தெரிவித்துள்ளார்.