பருத்தித்துறையில் ஒன்றரை வயதுப் பச்சிளம் குழந்தை உட்பட மேலும் மூவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 315 பேருக்குக் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் மூவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குக் கொழும்பிலிருந்து வீடு திரும்பிய நிலையில் கடந்த வியாழக்கிழமை குடும்பஸ்தர் ஒருவர் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் அவரது குடும்ப உறுப்பினர்கள் மூவருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதற்கமைவாக மேற்படி குடும்பஸ்தரின் ஒன்றரை வயது குழந்தை, மனைவி (வயது 29) மற்றும் மாமியார் (வயது 65) ஆகிய மூவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.