வெள்ளப் பாதிப்புக்களை நேரில் சென்று ஆராய்ந்தார் யாழ்.மேயர்!

04
04

புரவி புயல் அசாதாரண நிலைமைகள் காரணமாக யாழ்ப்பாணம் முனீஸ்வரன் வீதியில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்களை யாழ். மாநகர மேயர் இம்மானுவல் ஆனல்ட் நேற்று நேரடிக் கள விஜயம் மேற்கொண்டு ஆராய்ந்தார்.

இதன்போது குறித்த வீதியில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புக்கள், வடிகால் ஒழுங்கமைப்புக்கள் தொடர்பில் அவர் ஆராய்ந்தார்.

அப்பகுதியில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தகர்கள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் மேயருடன் கலந்துரையாடினர்.

மேயரும் வர்த்தகர்களின் பிரச்சினைகள் தொடர்பில் உரிய தெளிவுகளை வழங்கினார்.

மேயரின் இந்த விஜயத்தில் யாழ். மாநகர பிரதி மேயர் து.ஈசனும் இணைந்திருந்தார்.