யாழ். மாவட்டத்தில் தற்போதுவரை 72410 பேர் பாதிப்பு!

20201203 172457 1
20201203 172457 1

யாழ். மாவட்டத்தில் தற்போதுவரை 21884 குடும்பங்களை சேர்ந்த 72410 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இதுவரை இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ள அதேவேளை 6 நபர்கள் காயமடைந்துள்ளதாக ரீ.என்.சூரியராஜா மேலும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு யாழ். மாவட்டத்தில் தற்போது 42 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 111 குடும்பங்களை சேர்ந்த 3841 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், 66 வீடுகள் முழுமையாகவும், 2886 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.