அடுத்த ஆண்டு இலங்கை அணியுடன் இடம்பெற உள்ள டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து அணியின் சகல துறை ஆட்டக்காரர்களான ஜொப்ரா ஆர்ச்சர் மற்றும் பென் ஸ்டோக் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் மொயின் அலி மற்றும் ஜானி பெயிஸ்ட்ரோ ஆகியோருக்கு இந்த தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.