ஆஸி அணிக்கெதிரான இறுதி இரண்டு டெஸ்ட் போட்டிகள்: உமேஷ் யாதவ் வெளியே- நடராஜன் உள்ளே!

113955818 hi062193265 2 720x450 1
113955818 hi062193265 2 720x450 1

அவுஸ்ரேலியா அணிக்கெதிரான இறுதி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து இந்தியக் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் விலகியுள்ளார்.

இதனால், அவருக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த நடராஜன் மற்றும் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட ஷர்துல் தாகூரை, இந்திய அணி நிர்வாகம் பரிந்துரைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது.

நடராஜன் தற்போது அவுஸ்ரேலியாவில் இந்திய அணிக்கு வலைப்பயிற்சியில் பந்துவீசி வருகிறார். பெரும்பாலும் அவருக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம்.

நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இதுவரை இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா 1 வெற்றியை பதிவுசெய்துள்ளன.

இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 7ஆம் திகதி சிட்னி மைதானத்திலும் இறுதி டெஸ்ட் போட்டி ஜனவரி 15ஆம் திகதி பிரிஸ்பேன் மைதானத்திலும் நடைபெறவுள்ளது