ஐ பி எல் தொடரில் விளையாடியபோது ரோகித் சர்மா காயம் அடைந்தார். இதனால் துபாயில் இருந்து நேரடியாக ஆஸ்திரேலியா செல்லவில்லை. இந்தியா திரும்பிய ரோகித் சர்மா, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதியை நிரூபிப்பதற்கான உடற்பயிற்சியை மேற்கொண்டார்.
உடற்தகுதி பரிசோதனையில் தேர்ச்சி பெற்ற ரோகித் சர்மா கடந்த 16ஆம் திகதி ஆஸ்திரேலியா சென்றடைந்தார். கொரோனா வழிகாட்டு நெறிமுறை அடிப்படையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டியதாயிற்று. இதனால் அடிலெய்டு மற்றும் மெல்போர்னில் டெஸ்ட் போட்டிகளில் அவரால் பங்கேற்க முடியவில்லை.
29ஆம் திகதியுடன் அவரது தனிமைப்படுத்தல் முடிவடைந்தது. இதனால் சிட்னியில் இருந்து மெல்போர்ன் வந்து இந்திய அணியுடன் இணைந்துள்ளார். மெல்போர் வந்த அவருக்கு சக வீரர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.