இந்திய டெஸ்ட் அணியின் தலைவராக விராட் கோலியும், துணை தலைவராக ரஹானேவும் உள்ளனர். அடிலெய்டு டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு விராட் கோலி இந்தியா திரும்பியதால் ரஹானே தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அப்போது புஜாரா துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார்.
காயத்தில் இருந்தும் மீண்ட ரோகித் சர்மா, ஆஸ்திரேலியா சென்று தனிமைப்படுத்தலை முடித்துக் கொண்டு கடைசி இரண்டு போட்டியில் விளையாடுவதற்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அடுத்த இரண்டு போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. புஜாராவுக்குப் பதிலாக ரோகித் சர்மா துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய ஒயிட்-பால் கிரிக்கெட் அணியின் துணை தலைவராக ரோகித் சர்மா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.