சையத் முஷ்டாக் அலி கிண்ணத்திற்கான அரையிறுதிப் போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி தமிழகம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பை தீர்மானித்த தமிழக அணி ராஜஸ்தான் அணியை 112 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தியிருந்தது.
113 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தமிழக அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
தமிழக அணியின் வீரர் வாஷிங்டன் சுந்தர்டி இறுதி வரை ஆட்டமிழக்காது 54 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
நாளைய தினம் இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் கர்ணாடக அணியை எதிர்த்தாடவுள்ளது.