2021 சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 2-வது வாரத்தில் நடைபெற இருக்கிறது. இன்றைக்குள் தக்கவைத்துள்ள வீரர்கள், வெளியேற்றியுள்ள வீரர்களின் பட்டியலை சமர்பிக்க ஐபிஎல் அணிகளுக்கு நிர்வாகம் கெடு விதித்திருந்தது.
அதன்படி அனைத்து அணிகளும் தக்கவைத்துள்ள வீரர்கள் விவரம், விடுவித்த வீரர்கள் விவரத்தை வெளியிட்டுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தற்போதைய தலைவராக இருக்கும் ஸ்டீவ் ஸ்மித்தை அணியில் இருந்தே விடுவித்துள்ளது. இந்த நிலையில் புதிய தலைவராக சஞ்சு சாம்சனை நியமித்துள்ளது.