சையத் முஷ்தாக் அலி கிண்ணம் கர்ணாடகா வசம்

karnadaka
karnadaka

சையத் முஷ்தாக் அலி கிண்ணத்திற்காக நேற்றைய தினம் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு அணிகளுக்கிடையில் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் கர்ணாடகா அணி ஒரு ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்டிருந்த கர்ணாடகா அணி 20 ஓவர் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணி சார்பில் மனிஷ் பான்டே 60 ஓட்டங்களையும், கேஎல் ராகுல் 22 ஓட்டங்களையும், படிக்கல் 32 ஓட்டங்களையும், ரோஹன் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தமிழக அணி 20 ஓவர் நிறைவில் 179 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஒரு ஓட்டத்தினால் தோல்வியடைந்தது.

விஜய் ஷங்கர் 44 ஓட்டங்களையும், பாபா அபராஜித் 40 ஓட்டங்களையும், வொஷிங்டன் சுந்தர் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இதேவேளை விஜய் ஹசாரே தொடரின் இறுதி போட்டியிலும் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு அணிகள் தான் மோதின. அதிலும் தமிழ்நாடு அணியை வீழ்த்தி கர்நாடகா அணிதான் கோப்பையை கைப்பற்றியிருந்தது.

தற்போது சையத் முஷ்தாக் அலி தொடரின் இறுதி போட்டியிலும் தமிழ்நாடு அணியை வீழ்த்தி கர்நாடக அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.