ஜங்ஸ்டார் இளைஞர் கழகத்தின் வளர்சிகன் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கியது உடையார்கட்டு நண்பர்கள் அணி

received 1541717842689599
received 1541717842689599

கடந்தவருடம் உயிரிழந்த பல்கலைக்கழக புகுமுக மாணவன் வளர்சிகன் அவர்களுடைய ஞாபகார்த்தமாக புதுக்குடியிருப்பு ஜங்ஸ்டார் இளைஞர் கழகம் நடத்திய 16 அணிகள் பங்குபற்றிய மாபெரும் மென்பந்து சுற்று போட்டியில் இறுதிப் போட்டியில் உதயசூரியன் அணியுடன் பலப்பரீட்சை நடத்திய உடையார்கட்டு நண்பர்கள் அணி வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கியது.

கடந்தவருடம் உயிரிழந்த பல்கலைக்கழக புகுமுக மாணவன் வளர்சிகன் அவர்களுடைய ஞாபகார்த்தமாக புதுக்குடியிருப்பு ஜங்ஸ்டார் இளைஞர்கழகம் நேற்று (14) வளர்சிகன் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டியை புதுக்குடியிருப்பு பிரதேச சபை மைதானத்தில் நடத்தியது.

நேற்றுக்காலை முதல் இடம்பெற்ற 16 அணிகள் பங்குபற்றிய மாபெரும் மென்பந்து சுற்று போட்டியில் இறுதிப் போட்டியில் கிளிநொச்சி உதயசூரியன் அணியும் முல்லைத்தீவு உடையார்கட்டு நண்பர்கள் அணியும் மோதின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய உதயசூரியன் அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 79 ஓட்டத்தை பெற்றது 80 என்ற வெற்றி இலக்கோடு துடுப்பெடுத்தாடிய நண்பர்கள் அணி வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கியது.

குறித்த போட்டியில் முதலாம் இடத்தை பெற்ற நண்பர்கள் அணிக்கு 7000 ரூபா பணப்பரிசும் சான்றிதழ்களும் வெற்றிக்கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டதோடு இடண்டாம் இடத்தை பெற்ற உதயசூரியன் அணிக்கு 5000 ரூபா பணப்பரிசும் வெற்றிக்கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டதோடு மூன்றாமிடம் பெற்ற மாணிக்கபுரம் நியூபாரதி அணிக்கு 3000 ரூபா பணப்பரிசும் வெற்றிக்கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டது.

ஜங்ஸ்டார் இளைஞர் கழக தலைவர் து.தூயவன் தலைமையில் இடம்பெற்ற போட்டி நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ஆண்டிஐயா புவனேஸ்வரன் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உப தவிசாளர் கனகசுந்தரசுவாமி ஜனமேஜெயந் புதுக்குடியிருப்பு இளைஞர் சேவை அதிகாரி அ.விஜிதரன் முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் கே.தனுசன் புதுக்குடியிருப்பு இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவரஞ்சன் வளர்சிகன் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் விருந்தினர்களாக கலந்துகொண்டு இறுதிப்போட்டியை ஆரம்பித்து வைத்து வெற்றிக்கேடயங்கள் பணப்பரிசில்கள் சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்