கடந்த 24மணி நேரத்தில் கிளிநொச்சியில் 17 பேர் கைது!

kaithu

கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த 13.03.2021 தொடக்கம் 14.03.2021 வரையானக் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 17பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்றத் தகவலுக்கமைய ஊரியான், முரசுமோட்டை, உமையாள்புரம், உருத்திரபுரம், திருவையாறு பகுதிகளில் சட்டவிரோதமணல் அகழ்வினைத்தடுக்கும் நோக்கில், கிளிநொச்சி காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பின் மூலம் 17 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 8 உழவு இயந்திரங்களும் 9 டிப்பர்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் காவல்துறை விசாரணைகளின் பின்னர் காவல்துறையினர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் வழங்கு தொடரப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் மேலும் குறிப்பிடுகின்றனர்.