இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் இருந்து சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளார்.
முத்தையா முரளிதரனின் குருதிக் குழாயில் அடைப்பு ஏற்பட்டதினால் இவர் சிகிச்சைக்காக சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
முரளிதரனுக்கு என்ஜியோ-பிளாஸ்ட்டி முறையில் குருதிக் குழாயின் அடைப்பு நீக்கப்பட்டதையடுத்து, இவர் வழமையான செயற்பாடுகளில் ஈடுபடலாம் என வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
முத்தையா முரளிதரன் ஐ.பீ.எல் சுற்றுத்தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) அணிக்கு பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.