இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் ஒருநாள் சர்வதேச போட்டி தற்சமயம் நடைபெற்று வருகின்றது
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் பகல்-இரவு போட்டியாக நடைபெற்றுவரும் இந்தப்போட்டியில் நனைய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியாஅணி தமக்கு வழங்கப்பட்ட 50 பந்து பரிமாற்றத்தில் 8 விக்கட்டுக்களை இழந்து 287 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது .
துடுப்பட்டத்தில் இந்திய அணிசார்பில் ஸ்ரேயாஸ் ஐயர் 70
ஓட்ட ங்களையும் ரிஷாப்பந்த்,71 ஓட்டங்களையும் கேதார் ஜாதவ்,
40 ஓட்டங்களையும் ரோஹித் ஷர்மா,36 ஓட்டங்களையும் அதிகூடிய ஓட்டங்களாக பெற்றுக்கொடுத்தனர் .
இதேவேளை மேற்கிந்திய தீவுகள் அணிசார்பில் பந்துவீச்சில் ஷெல்டன் கோட்ரெல் மற்றும் கீமோபோல்,அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களை வீழ்த்தினார் .
இதனை அடுத்து 288 ஓட்டங்களைவெற்றிஇலக்காக கொண்டு தற்பொழுது துடுப்படிவரும் மேற்கிந்திய தீவுகள் அணி சற்று முன்வரை 100 ஓட்டங்களை ஒரே ஒரு இலக்கினை இழந்து பெற்றுள்ளது. அந்தவகையில் மேற்கிந்திய தீவுகள் அணிசார்பில் வீழ்த்தப்பட்ட இலக்கினை முகமது ஷமி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது.
இதனை அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகின்றமை குறிப்பிடத்தக்கது .