அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளருமான மைக்கல் ஹஸி (45) கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.
இதனை ஹஸியின் முகாமையாளர் நெய்ல் மெக்ஸ்வெல் உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் லக்ஷ்மிபதி பாலாஜி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தார்.
இந்நிலையில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் உள்ளிட்ட குழாமினர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் குழாமினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதேவேளை, மேலும், ஐ பி எல் வீரர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, ஐ பி எல் போட்டிகளை காலவரையறையின்றி பிற்போடுவதற்கு இந்திய கிரிக்கெட் சபையும் ஐ பி எல் போட்டி ஏற்பாட்டுக் குழுவும் ஏகமனதாக நேற்று தீர்மானம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.