இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட்கோலி கொவிட்-19 தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளார்.
தடுப்பூசி ஏற்றிக்கொண்ட படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள அவர், அனைவரும் கொவிட்-19 தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான இஷான் சர்மாவும் அவரது மனைவியும் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
மேலும் கடந்த வாரம் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் உமேஷ் யாதவ், அஜிங்கியா ரகானே, ஷிகர் தவான் ஆகியோரும் தடுப்பூசியினை ஏற்றிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.