இவ்வருடத்தில் நடத்துவற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் அனைத்து சங்கம் மற்றும் சம்மேளன தேர்தல்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னதாக நடத்தி, புதிய அதிகாரிகள் குழாமை நியமிக்க வேண்டும் என விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொவிட் நிலைமை காரணமாக தேர்தலை நடத்துவதற்கான இயலுமை தற்போது இல்லை என அவதானிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் குழுவுடன் இணைந்து கலந்துரையாடி, தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கிரிக்கெட் சங்கங்களுக்கு, கிரிக்கெட் அபிவிருத்தி திணைக்களம் கோரியுள்ளது.