இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இந்திய அணியின் முன்னாள வீரர் ரமேஸ் பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய டபிள்யு.வி.ராமன் தமது பதவியிலிருந்து விலகிய நிலையில் புதிய பயிற்றுவிப்பாளராக ரமேஸ் பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பதவிக்கு 35 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், ரமேஸ் பவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது.