கிரிக்கெட்டில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்குபற்றும், அணிகளின் எண்ணிக்கையை 20 ஆக அதிகரிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரிலிருந்து, 20 கிரிக்கெட் அணிகள் பங்குபற்றவுள்ளன.
இவ்வருடத்தில் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் இடம்பெறவுள்ள அதேவேளை, அதில் 16 அணிகள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.