தெ.ஆபிரிக்கா – ஆஸி. – பாக். கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவுகளும் பங்கேற்கிறது

Capture 5 720x450 1
Capture 5 720x450 1

தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் முதலான அணிகளுடனான கிரிக்கட் தொடர்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணி விளையாடவுள்ளது.

அடுத்த மாதம் 10 ஆம் திகதி முதல், ஓகஸ்ட் மாதம் 24 ஆம் திகதிரை மேற்கிந்தியத் தீவுகளில் இந்தத் தொடர்கள் இடம்பெறவுள்ளதாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கட் அறிவித்துள்ளது.

நான்கு டெஸ்ட், மூன்று ஒருநாள் சர்வதேச மற்றும் 15 இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டிகள் கொண்ட தொடரில் குறித்த மூன்று அணிகளும் பங்கேற்க உள்ளன.

இதன்படி, தென்னாபிரிக்க அணி, ஜுன் மாதம் 10 ஆம் திகதி முதல், ஜுலை 3ஆம் திகதிவரை 2 டெஸ்ட், 5 இருபதுக்கு 20 போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் விளையாட உள்ளது.

அவுஸ்திரேலிய அணி, ஜுலை 9 முதல் ஜுலை 24 வரை, மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன், 5 இருபதுக்கு 20 மற்றும் மூன்று ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் விளையாட உள்ளது.

பாகிஸ்தான் அணி, மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன், ஜுலை 27 முதல் ஓகஸ்ட் 24 வரை 5 இருபதுக்கு 20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க உள்ளது.