சர்வதேச டென்னிஸ் சம்மேளத்தினால் ஆண்டு தோறும் வழங்கப்படும் உலக சம்பியன் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் ஆடவர் பிரிவில் ரபேல் நடாலுக்கும், மகளிர் பிரிவில் ஆஷ்லி பர்டிக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
உலகின் முன்னணி வீராங்கனையான அவுஸ்ரேலியவை சேர்ந்த ஆஷ்லி பர்டி, கடந்த 2014-இல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக டென்னிஸை விட்டு விலகினார்.
எனினும், மீண்டும் 2016-இல் டென்னிஸ் போட்டியில் இணைந்த பர்டி, பிரெஞ்சு ஓபன் சம்பியன் பட்டத்தை கைப்பற்றியிருந்தார்.
அதேபோன்று உலகின் முதல் நிலை வீரராக நான்காவது முறையாக பருவக்காலத்தை நிறைவு செய்யும் நடால், பிரெஞ்சு ஓபன், யுஎஸ் ஓபன் பட்டங்களை வென்றுள்ளார்.
இதற்காக அவருக்கு ஐடிஎஃப்பின் ஸ்டெபான் எட்பர்க் விருது மூன்றாவது முறையாகவும் வழங்கப்பட்டுள்ளது.