இடைநீக்கம் செய்யப்பட்ட இலங்கை வீரர்கள் நாடு திரும்பினர்

thumb large medis
thumb large medis

இங்கிலாந்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியமைக்காக தேசிய அணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட இலங்கை வீரர்களான குசல் மெண்டீஸ், நிரோஷன் திக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோர் நாடு திரும்பியுள்ளனர்.

இவர்கள் இன்று பிற்பகல் 1.15 மணியளவில் லண்டனிலிருந்து ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் மூலமாக கட்டுநாயக்க, பண்டாநரயாக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அதன் பின்னர் அவர்கள் 14 நாள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக நீர்கொழும்பில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றுக்கும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இவர்கள் மூவர் மீதும் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு விசாரணைகள் முடிவடையும் வரை, அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.