இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் 3 வீரர்களுக்கு கொவிட்

62178
62178

இலங்கை அணிக்கு எதிரான தொடரில் பங்குபற்றிய இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக இ்ங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

அத்துடன் இங்கிலாந்து அணியின் முகாமைத்துவ குழுவின் 4 உறுப்பினர்களும் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக அந்த அணி வீரர்கள் தற்போது தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

அதேநேரம் பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்காக இங்கிலாந்து அணியின் புதிய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அணியின் தலைவராக பென் ஸ்டொக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.