இலங்கை கிரிக்கட் அணியின் பதில் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக தம்மிக சுதர்சன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கட் வட்டார தகவல்கள் இதனை தெரிவித்துள்ளன.
இலங்கை கிரிக்கட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளரான கிராண்ட் பிளவருக்கு அண்மையில் கொவிட்-19 தொற்றுறுதியானது.
இதன்காரணமாக இந்திய அணியுடனான கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி வீரர்கள் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் இன்றியே பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளரான தம்மிக சுதர்சன தற்காலிக துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.