ஆசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகளுக்கு இலங்கை தேசிய கரப்பந்தாட்ட அணி தகுதி பெற்றுள்ளது.
கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில், இன்று இடம்பெற்ற தகுதிகாண் போட்டியில் 3 – 0 என்ற அடிப்படையில் உஸ்பெகிஸ்தானை தோற்கடித்ததன் ஊடாக ஆசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகளுக்கு இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது.
இப்போட்டிகளில் 25 – 23, 25 – 13 மற்றும் 25 -22 என்ற செட் கணக்கில் உஸ்பெகிஸ்தான் அணியை இலங்கை கரப்பந்தாட்ட அணி தோற்கடித்தது.
இலங்கை அணி இதற்கு முன்னதாக, ஆசிய சம்பியன்ஷிப் போட்டிகளில் இரண்டு தடவைகள் உஸ்பெகிஸ்தான் அணியுடன் மோதியுள்ளது.
2011 மற்றும் 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற இப்போட்டிகளில் மூன்று சுற்றுகளில் 3 -0 என்ற கணக்கில் இலங்கை அணி வெற்றிபெற்றது. 1975 ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆசிய சம்பியன்ஷிப் கரப்பந்தாட்ட போட்டிகளில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை அணிக்கு அதிபட்சமாக 8 ஆவது இடத்தையே பிடித்திருந்தது.
2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பியன்ஷிப் போட்டியிலேயே இலங்கை அணிக்கு இந்த இடம் கிடைத்தது. 2019 ஆம் ஆண்டு ஆசிய சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணி 14 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.