ஜெயசூர்யாவின் நீண்டநாள் சாதனையை முறியடித்த ரோகித்

download 2 3
download 2 3

இலங்கை ஜாம்பவான் சனத் ஜெயசூர்யாவின் 23 ஆண்டுகால சாதனையை இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா முறியடித்துள்ளார்.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில் ரோகித் சர்மா 63 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் இந்தாண்டு ஒருநாள் போட்டிகளில் அவரின் ரன் கணக்கு 1490 ஆனது, இதோடு டெஸ்டில் 556 ரன், 20 ஓவர் போட்டியில் 396 ரன்) மொத்தம் 2,442 ரன்கள் குவித்துள்ளார்.

இதன்மூலம் ஒரு ஆண்டில் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த தொடக்க வீரர் என்ற இலங்கை ஜாம்பவான் சனத் ஜெயசூர்யாவின் (1997-ம் ஆண்டில் 2,387 ரன்) 22 ஆண்டு கால சாதனையை ரோகித் சர்மா முறியடித்துள்ளார்.

இதை தொடர்ந்து புதிய சாதனை படைத்த அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.