இலங்கை அணிக்கு 165 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

spt01
spt01

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் முதல் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்து முதலில் துடுப்பெடுத்தாடுமாறு இந்திய அணிக்கு அழைப்புவிடுத்தது.

அதற்கமைய, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 164 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் இந்திய அணிசார்பில் சூர்யகுமார் யாதவ் அதிகபடியாக 50 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன், அணித்தலைவர் ஷிக்கர் தவான் 46 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் துஷ்மந்த சாமீர (24 – 2) மற்றும் வனிந்து ஹசரங்க (28 – 2) தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில், 165 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாட தயாராகிவருகிறது.