பங்களாதேஷ் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5ஆவது இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி டாக்காவில் இலங்கை நேரப்படி இன்று மாலை 5.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையில் 5 இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறுகின்ற நிலையில் பங்களாதேஷ் அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
நான்காவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 3 விக்கட்டுகளால் வெற்றிப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.