அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான 20 க்கு 20 கிரிக்கட் போட்டியில், பங்களாதேஷ் அணி, 60 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
டாக்காவில் நேற்றிரவு இடம்பெற்ற இந்தப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 122 ஓட்டங்களைப் பெற்றது.
இதையடுத்து, 123 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய அவுஸ்திரேலிய அணி, 13.4 ஓவர்களில் 62 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.
இந்த வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட 20 க்கு 20 தொடரை, 4 க்கு 1 என்ற அடிப்படையில் பங்களாதேஷ் அணி கைப்பற்றியுள்ளது.