பரா ஒலிம்பிக் போட்டிகளை பார்வையிட ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நாளாந்தம் அதிகரிக்கும் கொரோனா நோயாளர்களை கருத்திற்கொண்டு அண்மையில் நடைபெற்று முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.
இந்தநிலையில், எதிர்வரும் 24 ஆம் திகதி டோக்கியோவில் ஆரம்பமாகவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பரா ஒலிம்பிக்கிலும் ரசிகர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என ஏற்பாட்டு குழுவினர் அறிவித்துள்ளனர்.
கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய பரா ஒலிம்பிக்ஸ் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.