கரீபியன் ப்ரீமியர் லீக்கில் அபார திறமையை வெளிப்படுத்திய இசுறு உதான!

download 1 39
download 1 39

கடந்த யூலை 30 ஆம்திகதியுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற இலங்கை கிரிக்கெட் வீரர் இசுறு உதான, மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்றுவரும் கரீபியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு20 போட்டிகளில் அபார திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

ட்ரின்பாகோ நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாடிவரும் இசுறு உதான, இன்று அதிகாலை இடம்பெற்ற பார்படோஸ் ரோயல்ஸ் அணியுடனான போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகனாக தெரிவானார்.

இவர், க்ளென் ப்ளிப்ஸ், ஜோன்சன் சார்ள்ஸ், அஸாம்கான், அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் மற்றும் திசர பெரேரா ஆகியோரை தனது பந்துவீச்சில் வீழ்த்தினார்.

இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய பார்படோஸ் ரோயல்ஸ் அணி, 122 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இப்போட்டியில் இசுறு உதான 4 ஓவர்களில் 21 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பாடிய ட்ரின்பாகோ நைட்ரைடர்ஸ் அணி 16.5 ஓவரில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 125  ஓட்டங்களைப் பெற்று போட்டியில் வெற்றியீட்டியது.