மனோகரன் கெனடியின் ஞாபகார்த்த கிரிக்கட் சுற்றுப் போட்டி!

20191228 143820
20191228 143820

அமரர் பேராசிரியர் கலாநிதி விஜயரத்தினம் ஜோன் மனோகரன் கெனடியின் ஞாபகார்த்தமாக மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் விளையாட்டு பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று சனிக்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் இவ் அறிவித்தலை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அணிகளுக்கு இடையிலான இப் போட்டிகளில் ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ள முடியும்.

விளையாட்டு துறையை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் குறித்த போட்டிகள் அணிக்கு 6 பேர் கொண்ட, 5 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக நடைபெறும்.

இப் போட்டிகளில் பாடசாலை அணிகளும் பங்கு கொள்ள முடியும்.

வெற்றி பெறும் அணிக்கு ஒரு இலட்சம் ரூபா பரிசு வழங்கப்படும்.

எதிர்வரும் ஜனவரி மாதம் 5ஆம் திகதிக்கு முன்னர் இரண்டாயிரம் ரூபா பதிவுக்கட்டணத்தினை செலுத்தி தமது கழகத்தினை பதிவு செய்யுமாறு தெரிவித்தனர்.

விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளும் வழிமுறைகள் தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.