இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரை நேரில் பார்வையிடத் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இடம்பெற்று வரும் உலகக் கிண்ண தொடருக்குப் பின்னர் 2 டெஸ்ட் மற்றும் 3 இருபதுக்கு 20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து அணி இந்தியாவுக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளது.
இந்தத் தொடர் எதிர்வரும் 17 ஆம் திகதி இந்தியாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், போட்டியினை மைதானத்தில் பார்வையிடுவதற்கு செல்லும் ரசிகர்கள் குறைந்த பட்சம் ஏதேனும் ஒரு தடுப்பூசியினையாவது பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சுகாதார வழிகாட்டுதல்களும் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.