இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று (11) இடம்பெறவுள்ளது.
அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் இந்தப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ளது.
இதற்கமைய, அந்த அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மோதவுள்ளது.