இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையில் இன்று நடைபெறுகிறது.
இந்த போட்டி குறித்து டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ள இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க, இந்த போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எனது பூரண ஆதரவு என தெரிவித்துள்ளார்.
இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான வலுவான நட்புறவு எல்லாவற்றையும் விடவும் மேலானது என்றும் அவர் கூறியுள்ளார்.
உலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில், நியூசிலாந்து ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்ளும்.