2022 இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் அவுஸ்திரேலியாவின் 7 இடங்களில் இடம்பெறவுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தத் தொடரின் ‘சுப்பர் 12’ சுற்றில் பங்கேற்பதற்கு இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் தகுதிகாண் போட்டிகளில் விளையாட வேண்டும்.
இதற்கமைய 2022 இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு அக்டோபர் 16ஆம் திகதி முதல் நவம்பர் 13ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றவுள்ளது.
எடிலெய்ட், பிரிஸ்பேர்ன், மெல்போர்ன், பேர்த் மற்றும் சிட்னி உள்ளிட்ட 7 இடங்களில் இந்தத் தொடர் இடம்பெறவுள்ளதோடு இறுதி போட்டி மெல்போர்னில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிட்னி மற்றும் எடிலெய்ட் ஆகிய இடங்களில் அரையிறுதி போட்டிகள் இடம்பெறவுள்ளன.