இந்திய அணிக்கு எதிரான இருபதுக்கு20 தொடரிலிருந்து கேன் வில்லியம்சன் விலகல்!

sm 1
sm 1

இந்திய அணிக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரிலிருந்து நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவந்த இருபதுக்கு 20 உலக கிண்ணத் தொடர் கடந்த 14 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.

இதில் நியூசிலாந்து – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதல் முறையாகக் கிண்ணத்தை கைப்பற்றியது.

இந்நிலையில், இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நியூசிலாந்து அணி, மூன்று இருபதுக்கு 20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இத்தொடரில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து அணி நேற்று இந்தியா சென்றுள்ளது. இருபதுக்கு 20 உலக கிண்ணத் தொடரில் ஏற்கனவே உயிர்குமிழி பாதுகாப்பு வலயத்தில் வீரர்கள் இருந்தமையினால் அவர்கள் தனி விமானம் மூலமாக இந்தியாவின் ஜெய்ப்பூர் விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரிலிருந்து விலகுவதாக நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் அறிவித்துள்ளார்.

கான்பூரில் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பாகும் டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில், இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் இருந்து விலகுவதாக கேன் வில்லியம்சன் அறிவித்துள்ளார்.

இதன்படி நாளை (17) ஆரம்பமாகும் இருபதுக்கு 20 தொடரின் ஆரம்ப போட்டியில் டிம் சவுதி அணித் தலைவராக செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.