சர்வதேச கிரிக்கட் பேரவையின் 2022 ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்கு உட்பட்ட உலக கிண்ண ஒருநாள் கிரிக்கட் போட்டி தொடரிலிருந்து நியூசிலாந்து அணி விலகியுள்ளது.
போட்டித் தொடருக்காக முன்வைக்கப்பட்டுள்ள சுகாதார வழிக்காட்டல்கள் கடுமையாக்கப்பட்டமை காரணமாகவே இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டதாக நியூசிலாந்து கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், அந்தத் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஸ்கொட்லாந்து அணி பெற்றுள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கிண்ண கிரிக்கட் போட்டி எதிர்வரும் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி முதல் பெப்ரவரி 5 ஆம் திகதி கரீபியன் தீவுகளில் இடம்பெறவுள்ளது.