இந்திய – இலங்கை அணிகளுக்கிடையிலான 2வது போட்டியில் இந்திய அணி 7 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் இலகு வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 142 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக குசல் ஜனித் பெரேரா 34 ஓட்டங்களையும், குணதிலக 20 ஓட்டங்களையும், அவிஷ்க பெர்னான்டோ 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் தாக்கூர் 3 விக்கட்டுக்களையும், நவ்தீப் சைனி, குல்தீப் ஜாதவ் தலா 2 விக்கட்டுக்களை வீழ்த்தினர்.
பதிலுக்க துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 17.3 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை மாத்திரம் வெறறி இலக்கினை அடைந்தது.
இந்திய அணி சார்பில் ராகுல் 45 ஓட்டங்களையும், தவான் 32 ஓட்டங்களையும், ஸ்ரேயர் ஐயர் 34 ஓட்டங்களையும், விராட்கோலி 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் ஹசரங்க 2 விக்கட்டுக்களையும், லகிரு குமார 1 விக்கட்டினையும் வீழ்த்தினர்.
இவ் வெற்றியுடன் இந்திய அணி 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
ஆட்டநாயகனாக நவ்தீப் சைனி தெரிவுசெய்யப்பட்டார்.
இரு அணிகளுக்குமிடையிலான 2வது போட்டி எதிர்வரும் 10ம் திகதி நடைபெறவுள்ளது.