இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது T20 கிரிக்கட் போட்டி பாகிஸ்தானின் லாஹூரில் இன்று (Oct.07) இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இலங்கை அணியும், அடுத்து வருகின்ற இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று சொந்த மண்ணில் தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும் இன்று களமிறங்கவுள்ளன.
இரண்டு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.